#நூலகத்தொடர் – 7: மூலமத்யமககாரிகா, Tractatus Logico-Philosophicus

Day 7 :
Mulamadyamakakarika – Acharya Nagarjuna
Tractatus Logico-Philosophicus – Ludwig Wittgenstein
Philosophical investigations: Ludwig Wittgenstein

இன்றைய நூல்கள்: பௌத்தமுனிவர் நாகார்ச்சுனர் எழுதிய மூலமத்தியமிககாரிகா மற்றும் தத்துவ-கணிதஏரண வல்லுனர்/logician லுட்விக் விட்கன்ஸ்டைன் வெளியிட்ட ஒரே புத்தகம், பின்னர் அவரின் இறப்பினுக்குப்பின்னர், இரண்டாம் நூல் அவருடைய மற்ற ஆய்வுவேலைகளில் இருந்து எடுத்து பிரசுரிக்கப்பட்டன.

இறுக்கமுமல்லாது, தளர்வுமில்லாது நடுவழி செல்லும் பௌத்தவழியில் வந்த மாமுனியான நாகார்ச்சுனர், இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்தவர். வெறுமையைப் பெரிதும் பேசியவர். வெறுமையில் இருந்து எப்படி இவ்வளவும் வந்தது என்பதைப் பேசியிருப்பார். அண்டம் பிறந்து வளர்ந்ததைப் போலவே இருப்பதுபோல், இது அடிக்கடித் தோன்றும். இது முற்றிலும் எனதுக் கருத்தானாலும், குவாண்டவியல் வழியாக இவரின் தத்துவத்தைக் காணவும், அது சார்ந்து உழைக்கவும் எனது விருப்பம்.

விட்கன்ஸ்டைனின் Tractatus Logico-Philosophicus/ஏரண ஆய்வுநூலைக் காணும்போதெல்லாம், அவரும் நாகார்ச்சுனர் பேசியது போல பேசியிருப்பதாலேயே இவற்றைக் கலந்து அறிமுகப்படுத்தியிருக்கிறேன்! ஆயினும் விட்கன்ஸ்டைன் பொருண்மைவாத ஏரணங்களிலேயே இருப்பது என்வரையிலான அனுபவம். எல்லோருக்கும் விட்கனஸ்டைனை அவருடைய ஏரண-மெய்யட்டவணை/truth table மூலமாகவும், வாத்து-முயல் தோற்றமயக்கப் படம்/duckrabbit illusion மூலமும் அறிந்திருக்க வாய்ப்பு உண்டு, அவரே மெய்யட்டவணைமாதிரியான ஏரணவாதங்களை முதலில் பயன்படுத்தியவர். தனது இரண்டாவது நூலில், தான் எழுதிய முதலாம் நூலில் ஏற்பட்ட விவாதங்களில் உள்ளப் பலக்குறிப்புகளை, அவரே விமர்சித்திருப்பார். இவரது நூல்களில், மொழியின் வடிவம், சொற்பொருளியல்/semantics, விளையாட்டுப்புதிர்கள், ஏரண கணிதம் ஆகியவற்றைப் பெரும்பாலும் பேசியிருக்கிறார்.

எனக்குப் பிடித்த மற்றத்தத்துவவியலாளர்கள் நூல்களைப் பற்றியும் பேச ஆசை. தர்மகீர்த்தி, இரஸ்ஸல்/Betrand Russell, டெ கார்ட்/Rene Descartes, பாப்பர்/Karl Popper ஆகியோரின் தத்துவங்களைப்பற்றியும் நம்மூர் நூல்களான விவேக சம்ஹிதை, உபநிடதங்கள் போன்ற தத்துவங்களைப்பற்றியும் வேறொரு சமயத்தில் பார்க்கலாம்!

#நூலகத்தொடர்

No automatic alt text available.
Image may contain: 1 person, text
LikeShow more reactions

Comment

#நூலகத்தொடர் – 6: Snow Crash

Day 6: Snow Crash – Neal Stephenson – a science fiction speaks on science, philosophy politics, religion, cryptography, linguistics, psychology, anthropology, etc.

ஆகச்சிறந்த தொடக்ககால அறிவியற்புனைவுக்கதைகளைவடித்த ஐசக் அசிமோவ் போன்றோரின் கதையையெல்லாம் பெரிதாகப் படித்ததில்லை. திடீரென, அந்தப்பக்கம் எட்டிப்பார்க்கலாம் எனும்போது, நண்பரொருவர், ஸ்னோ கிராஶை அறிமுகப்படுத்தினார். அதற்குள்ளே, முகநூல் நிறுவனர் நம் உளத்தைப் பிடிப்பதற்கு நம்முடைய வாயிலிருந்தே விசயங்களை வாங்கி அரசியலுக்குத் துணைபோனதுப் போன்றதே இக்கதையும்!

இக்கதையும் கோடல் எஷர் பாஹ் மாதிரி, பல விசயங்களைக் கலந்து கோணலான பெருமுதலாளித்துவத்துக்கான அடிமைச்சமூகத்தை உருவாக்குவதைப்பேசும் ஒன்று. இதில் கணினியியல், உளவியல், மொழியியல், வரலாறு, சேதிமறைவியல், தத்துவம், மதம், மக்களியல் என எல்லாவற்றையும் பேசியிருப்பார் ஆசிரியர்.

வியாபாரநிமித்தம் ஒருகுழு, மொத்த உலகத்துக்கும் snow crash எனும் உணர்வுவழியில்(கண், காது) கணினி வைரஸ் மாதிரியான ஒரு காணொலியைத் தொலைக்காட்சி, இணைய ஒளி/லிபரப்பு மூலம் செலுத்தி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுயல்வார்கள். இங்கு வைரஸ் என்பது, கணினி வைரஸ் மாதிரியானதும், உயிரியல் வைரஸ் வழியும் சேதிப்பரிமாற்றத்தை நிகழ்த்தி, DNA-ல் நடைபெறும் உருமாற்றத்தால் விளையும் விசயமாகவும் இருக்கலாம்.

இம்மாதிரியான நடவடிக்கைகள், எப்பொழுதும் சமூகத்தில் நடப்பதே என்பதையும் உணர்த்தும்வகையில் வெவ்வேறு இடங்களில், காலங்களில் நடந்த விசயங்களை வைத்து குறிப்பிட்டுக் காட்டியிருப்பார். முன்பொருக் காலத்தில் வாழ்ந்த சுமேரியக்குடிகளின் கடவுளான எங்கி (Enki) தான் முதன்முதலில் தன் விந்தின் மூலம் தன்னுடைய தாத்பர்யத்தையும் குணத்தையும் அடுத்தடுத்தத் தலைமுறைக்கு வைரஸ் தற்பொழுது கணினிகளில் பரவுவது போல், பரப்பியதற்கான முன்னோடி என்பதில் ஆரம்பித்து, மதப்பரப்புரை வரை ஒப்பிட்டுப் பேசியிருப்பார். கதையினூடே வரலாறும் தத்துவமும் பின்னிப்பிணைந்திருக்கும்.

ஆசிரியரான நீல் ச்ஸ்டீன்பன்சன், அவதார், இணையம் போன்று இன்றைக்கு சர்வசாதாரணமாகப் பயன்படுத்தும் வார்த்தைகளை, இம்மாதிரியானப் பொருளில் முதலில் பயன்படுத்தினார் என்பர். இவர்க்கதைகளூம் வில்லியம் கிப்சன், அய்ன் ரேண்ட் (Objectivism-related) கதைகளும் எனக்கு ஒருகாலத்தில் பிடித்தமானவை, புனைவைப் பெரிதும் விரும்புவதில்லையெனினும்!
#நூலகத்தொடர்

Image may contain: text

#நூலகத்தொடர் – 5: Siddhartha

Day 5: Siddhartha – Hermann Hesse

நோபல் பரிசுபெற்ற ஹெர்மான் ஹெஸ்ஸே எழுதிய நூல் இது. முதுகலைப் படிக்கும்போதுதான் இந்நூலைப்பற்றியறிந்தேன்.

புத்தநிர்வாணநிலை, உளக்கட்டுப்பாடு, தியானம், யோகம், கம்யூனிசம், சாக்ரடீஸிற்கு முந்தைய தத்துவங்கள், தாந்திரீகமுறைகள், சம்சாரம் என உள்ளுக்குள் பலவிசயங்களைக் கேள்வியாக ஓட்டிக்கொண்டிருந்தகாலத்தில், சித்தார்த்தா எனப் பெயரைக் கேட்டதும் ஈர்த்த நூல், மேலும், மேற்கத்தியர் இதைப்பற்றியெழுதியிருக்கிறார் என்றவுடன் படிக்கத்தோன்றியது. ஹெஸ்ஸேயின் மற்றப்புதினங்களை விட இதுதான் எல்லோருக்கும் பிடித்ததாக இருக்கும் என படித்தப்பின் தோன்றியது.

கிட்டத்தட்ட 10 நூலாவது வாங்கியிருப்பேன், இக்கதையைப் பற்றித் தெரியவில்லையெனின், உடனே நண்பர்களுக்குப் பெற்றுத்தர வைத்த நூல். திரும்பத்திரும்பவும் படிக்கும் நூல்களில் இதுவும் ஒன்று.

ஹெஸ்ஸே, இந்தியாவந்து சந்நியாசம் வாங்கிவாழ்ந்து பார்க்கவேண்டும் என ஆசைப்பட்டு, முதலில் இலங்கை வந்திருக்கிறார். பின்னர் அங்கு வாழ்ந்தக்காலங்களில் ஏற்பட்ட அனுபவங்கள், புத்தமட விசயங்கள் எல்லாம் சேர்ந்து, “சந்நியாசமே வெறுத்துப்போய்” சம்சாரியாகவே வாழ்ந்திருக்கிறார். இதில் இந்தியா வராமலேயே, இந்தியாப் போகும் யோசனைக்கு முற்றாகப் பெரிய முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்!

கதைத்தலைவன் பிராமணன் சித்தார்த்தனுக்கும், கௌதமபுத்தருக்கும் கதையில் ஒரேயொரு இடத்தில் மட்டும் சம்பந்தம்வரும். மற்றபடி, சந்நியாச வாழ்க்கையை விரும்பிய, வேதபிராமணன் சமணனாகி, பௌத்தம்தொட்டு, சம்சாரியாகி நன்றாக வாழ்ந்து, பிரிவுத்துயரினைக் கற்று, மீனவரொருவரால், “நதிசொல்லித்தரும் பாடத்தைக் கற்று” முடிவில் ஞானமெய்துவதோடு, அடுத்தவரையும் ஞானம்பெறுவிக்கச் செய்து உய்விக்கும் நிலையையெட்டுவான்.

#நூலகத்தொடர்

Image may contain: 1 person, smiling

#நூலகத்தொடர் – 4: On Physics and Philosophy

Day 4:
On Physics and Philosophy – Bernard d’Espagnat.

உண்மையின் தன்மையென்ன, புலன்களின் தன்மையென்னவும் அளவுகோலின் அளவீட்டின் தன்மையென்ன என ஆழ்ந்துபேசிய நூல்.

உண்மையை உணர்தல் அரைகுறையாகயிருந்தால் என்னவாகும்? ஒரு மலரையெடுத்துக்கொண்டால், அதை, நாம் ஒரு நிறத்தில் காண்போம், பட்டாம்பூச்சி, வண்டுகள், தேனீகள் போன்ற ஒவ்வொருப்பூச்சியும் அதே மலரை வெவ்வேறுவண்ணத்தால் அறியவும் வாய்ப்புள்ளது. அப்படியானால் அளவீடு என்பது எதைவைத்து அளப்பது. அதைவிட, ஒரு மனிதர் பார்க்கும் நிறம் மற்றொரு மனிதருக்கும் அதேவாகத் தெரியவேண்டிய அவசியமுமில்லை.

நான்பார்க்கும் நிறத்தை என்னனுபவம் கற்றுத்தந்தது, ஆனால், என்னனுபவத்துக்கும் மற்றோரின் அனுபவத்துக்கும் உள்ள வித்தியாசத்தை அளவீடுகள் மூலம் எண்களைக் கொண்டுக் குறிப்பிடலாம். எண்களில் மாற்றம் வராது (ஓரளவுக்கு!). ஆனால், எண்களால் அளக்கமுடியாமல் போனால் என்னவாகும் என்பதே எல்லோருக்குமுள்ள கேள்வி. பொறியியலாளர்கள் பொருண்மையுலகில் இயந்திரங்கள் படைக்கும்போது பிரச்சினையில்லை. ஆனால், இன்னும் ஆழ்ந்து செல்லவேண்டிய நிலை உருவாகிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் கட்டுமான அறிவியலின் தாத்பரியத்தை உணரவேண்டிய சமயமாக உள்ளக் காலகட்டத்தில் ( அதாவது குவாண்டக் கணினியியல், குவாண்ட இணையதள நடவடிக்கைகள், செயற்கை நுண்ணறிவின் தாக்கம் உள்ள நேரத்தில்), இந்நூல் நிறையபேருக்கு உதவலாம்.

#நூலகத்தொடர்

Image may contain: text

#நூலகத்தொடர் – 3: Sophie’s world

Day 3:
Sophie’s World: A Novel about History of philosophy
-Jostein Gaarder

இந்த நூலின் மூலம் என் குழந்தைத்தனம் வெளிப்பட்டுவிட்டிருக்குமே எனத்தோன்றினாலும், சும்மா தத்துவத்தைப் பற்றி அறிந்துகொள்ள உகந்த நூல். பதின்ம வயதுப் பெண்ணான சோபிக்கு, யாரென்றுத் தெரியாத ஒரு “தத்துவவியலாளத்தாத்தா” தத்துவத்தைப் போதிப்பதுபோல புனைந்து எழுதியிருப்பார், தத்துவவியல் ஆசிரியரான யோஸ்டைன் கார்டர்.

இவ்வாறு தாத்தா அனுப்புங்கடிதங்களைக் கொண்டு அம்மாவிற்குந் தெரியாமல், படிப்படியாக தத்துவவியலின் வரலாறு மற்றும் சிறுசிறு விசயங்களைக் கற்று வளர்வாள். “நீ யார்?” எனக்கேட்கும் முதல்கேள்வியிலிருந்து, சாக்ரடீஸிற்கு முந்தைய எகிப்திய இந்தியச் சிந்தனைகள் முதற்கொண்டு, கிரேக்க தத்துவத்தின் தத்துவவியலர்கள் பற்றியக்குறிப்புகளையும், அப்படியேக் காலத்தில் வளர்ந்து, நடுவாந்தர ஐரோப்பியத் தத்துவவழி வந்து, புதுக்காலம் வரைக்கும் உள்ள தத்துவவியலாளர்களின் பொருண்மைவாதம், இருப்பியல், என எல்லாவற்றையும் பற்றியுணர்த்தக்கூடிய நூல். சுவாமி விவேகானந்தர், சர்வப்பள்ளி இராதாகிருஷ்ணன் போன்றோரையும் ஆசிரியர் குறிப்பிட்டிருப்பார்.

#நூலகத்தொடர்

#நூலகத்தொடர் – 2: American Prometheus

Day 2:

 

American Prometheus: The Triumph and Tragedy of J. Robert Oppenheimer
– K Bird & M J Sherwin

முதன்மையாக நண்பர்கள் Kathir Krishnamurthi, Ramasamy Selvaraj, Pitchaimuthu Sudhagar, Devanurpudur DrAnbu Selvan, Harinarayanan Janakiraman ஆகியோரை, இந்த நூலகத்தொடரில் பங்குகொள்ளுமாறு அழைக்கிறேன்!

நான் மிகவும் மதிக்கும் விஞ்ஞானிகளுள் ஓப்பனைமரும் ஒருவர். இந்தியத் தத்துவங்களில் ஈடுபாடு கொண்டிருந்த விஞ்ஞானிகளில் இவரும் முக்கியமானவர். இவரின் பெற்றோர், வடஅமெரிக்காவுக்கு செர்மனியில் இருந்து, வியாபாரம் பொருட்டு புலம்பெயர்ந்து, அமெரிக்காவில் வாழ்ந்துவந்தனர். அங்கேயேப் பிறந்து வளர்ந்த ஓப்பனைமர் சிறுவயது முதலேயே பல்புலப்புலமைக் கொண்டிருந்தார். சமக்கிருதம் முதலான மொழிகளைக் கற்றுத்தேர்ந்தவர். சப்பானில் மீதெய்யப்பட்ட அணுக்கருக் குண்டைப் பரிட்சிக்கும்போது, பகவத்கீதையைக் குறிப்பிட்டதைப் பலர் அறிந்திருக்கலாம்.

பின்னர், இயற்பியல் கோட்பாடுகளில் பலவிசயங்களைக் கண்டறிந்தவர் ஓப்பனைமர். மன்னட்டன் செயல்திட்டத்தின்/Manhattan Project மூலம் இரண்டாம் உலகப்போரில் சப்பானில் இடப்பட்டக் குண்டுகளை உருவாக்கியக் குழுமத்துக்குத் தலைமைவகிக்க அழைக்கப்பட்டார். ஆயினும், அவருடைய வாழ்க்கையில் பிரச்சினைகள் ஆரம்பித்தது, இரண்டாம் உலகப்போருக்கு முன்னரேயாயினும், இயல்பிலேயே கம்யூனிச சிந்தனைமிகுந்தவராக இருந்ததால், பனிப்போர்சிக்கலில் இரகசியங்களை மாற்றாருக்குக் கொடுத்ததாகவும், சதியாலோசனைகளுக்காகவும் சிறையிலடைக்கப்பட்டு, பின்பு அவருடைய கம்யூனிசத்தொடர்புகளுக்காக மன்னிப்புக் கேட்க வற்புறுத்தப்பட்டார்.

ஆகமொத்தம் கிரேக்க இதிகாசத்தில், ப்ரோமெத்தியஸ் (Prometheus) எப்படி விண்ணுலகில் இருந்த நெருப்பை, சாதாரண மானிடருக்காக மிகப்பிரயத்தனப்பட்டுக் கொண்டுவந்தாரோ, அது போன்ற ஒருவரேயெனப் பேசி, ஓப்பனைமரின் வாழ்க்கைவரலாற்றைக்காட்டும் நூல்!

#நூலகத்தொடர்