வானியற்பியலர் சந்திராவின் தமிழ் கையெழுத்து!

 
பேராசிரியர். செ. இரா. செல்வக்குமார் அவர்கள் இவ்வார வல்லமையாளராக, கணித நோபலான ஏபல் பரிசை வென்ற பேராசிரியர் சீனிவாச வரதனாரைவல்லமை” பக்கத்துக்காகத் தேர்வு செய்திருந்ததைக் குறிப்பிட்டிருந்தார். அப்பொழுது வந்த விவாதத்தில் வரதன் அவர்கள் தமிழைப் போற்றுவதையும் அவர்தம் தமிழிலக்கிய ஆர்வத்தையும் அக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். விவாதத்தில் கணிதவியலர் இராமானுஜனையும் மற்ற தமிழ் அறிவியலறிஞர்களைப் பற்றியும் பேசியிருந்தனர். அப்பொழுது தான், எனக்கு சந்திரசேகர் அவர்களின் கையெழுத்தைப் பற்றியும் அவர் ஏட்டில் தமிழில் எழுதியிருந்ததாய் குறிப்பிடப்பட்டதும் நினைவு வந்தது, அதை அவர்கள் பக்கத்தில் குறிப்பிட்டதையடுத்து, அதை தனியிடுகையாக இடும்படிக் குறிப்பிட்டிருந்தார்கள்.

புகழ்பெற்ற நோபலியர் சந்திரசேகரின் விண்மீன் காலவரையறையைக் குறிக்கும் படம்! எரிந்து முடிந்த விண்மீன்களின் ஆரத்திற்கும், சூரியனின் ஆரத்திற்குமான விகிதத்திற்கும், விண்மீன்-சூரிய நிறை விகிதத்திற்கும் ஆனத் தொடர்பு. விண்மீன் இறப்பு “பிண்டம்” எனக் குறிக்கப்பட்டுள்ளது!
அந்த ஏட்டின் “கையெழுத்துப் பிரதியின்” ஒரு பக்கத்தை, இயற்பியலர் பேரா. ஜி, வெங்கடராமன், அவர்களின் “Vignettes in Physics” நூல்கள் வரிசையில் வெளிவந்த ஒரு நூலான “Chandrasekhar and His Limits” (Univ. Press)-ல் அட்டைப்படத்தில் உபயோகித்திருந்தார்!
உண்மையில், அந்தப் படம் புகழ்பெற்ற இயற்பியலரான கியார்கி கேமௌ (George Gamow) அவர்கள், சந்திரசேகரின் கையெழுத்துப் பிரதியைப் பார்த்ததை வைத்து, கேமௌ அவர்களாலேயேத் திரும்பவும் “வரையப்பட்டது”! (ருஷ்யர் தமிழ் வார்த்தைகளை வரைந்திருப்பதால் தான் விட்டார்த்தம் பார்க்க வித்தியாசமாக உள்ளது!) அவரின் நூலிலிருந்து எடுத்ததைத் தான் வெங்கடராமன் தனது நூலில் பயன்படுத்தியிருந்தார்.
ஆயினும், இலக்கியமாக, வரலாறாக இல்லாமல், தமிழை கணித, இயற்பியல்– சேதியியல், வெப்பவியக்கவியல் , நரம்பியல் வழியாக அணுகியவர்கள் மிகக் குறைவாக இருந்தது/இருப்பது வருத்தமானது. எனக்குத் தெரிந்தவரை, கிஃப்ட் சிரோமணி மற்றும் அவருடன் உழைத்தவர்களின் ஆய்வுகளும் எனக்குப் பிடித்தமானவை! பேராசிரியர் தெய்வ சுந்தரம் நயினார் போன்றோரின் அணுகுமுறையும் கணினிமொழியியலில் வேலை செய்வோரின் ஆய்வுகளும் மொழி-அறிவியலின் கட்டமைப்புப் பற்றிய ஆய்வுகளை ஊக்குவிப்பதைக் காணும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது!

வார்த்தை விளையாட்டுகள்! தனித்தமிழ் வேட்கை?! :P ஒரு கருத்துத் திரட்டு

பத்மஶ்ரீ-பதும சிரி-பதுமத் திரு-தாமரைத்திரு எவ்வாறு அழைப்பது எனவும், தமிழில் சல்லிக்கட்டு என தமிழ்தழுவிவிட்டு ஆங்கில கீச்சுகளில் ஜல்லிக்கட்டு என ஆங்கிலம் அணைவதையும், கஜபாகு என்பது கயவாகு ஆனது எப்படி எனத் தொடங்கியப் பேச்சுகளினால், இடையில் நானும் விளையாண்டு பார்க்கலாம் என எண்ணியதன் விளைவே  இக்கட்டுரை, பேராசிரியர் செல்வக்குமார், கதிர் அண்ணன்மார், உமாமகேஸ்வரன், பி.ஏ. கிருட்டிணன், சுபாஷினி அவர்களின் கருத்துகளினாலும், அவற்றிற்கான என்னுடையப் பின்னூட்டங்களையும் கோத்து இணைத்திருக்கிறேன்.

மற்ற மொழிகளுக்கெல்லாம் ஒலிப்புமுறைகளை முறைதவறாமல் உட்கார்ந்து கற்கிறார்கள். ஆனால் தமிழில், வெற்றியை வெட்ரி என உச்சரிக்கிறார்களே என எண்ணியிருக்கையில், நேற்று ஏதோவொருக் காணொலியில், “கொட்டுகிற மழையில்” என்பது “கொட்டுற மழையில்” என நாம் பேசுவது போய் இப்பொழுது “கொற்ற மழையில்” என உச்சரிப்பதைக் கண்டு மிகவும் வருத்தமாகிவிட்டது. இதில் வேடிக்கை என்னவெனில், “கொற்றவை” எனப் படிக்க சொல்லியிருந்தால், “கொட்ட்ட்ரவை” என இரவைக் கொட்டப்பட்டிருக்கலாம்.  நாம், இதைப் போன்ற உச்சரிப்புப்பிழைகளைக் கிஞ்சித்தும் கண்டு கொள்வதில்லை. இதை மொழியின் பரிணாம வளர்ச்சியில் சேர்ப்பதா, பிற மொழித் தாக்கத்தில் விளைந்ததா, அல்லது மக்களுக்கு உண்மையில் உச்சரிக்கத் தெரியவில்லையா, சோம்பேறித்தனமா என ஒன்றும் விளங்கவில்லை. எனினும் இதற்கு செல்வா அண்ணா அவர்கள் கூறியது, உச்சரிக்கும் பொழுது இது போன்றத் தவறுகளைப் பொறுத்துக் கொள்ளலாம் என்பதில் எனக்கும் உடன்பாடு உண்டு, இருப்பினும் இதை ஆங்கிலஎழுத்துரு ஊடாக தமிழ் எழுதும் பொழுது பெருங்குழப்பம் உண்டுபண்ணுவதைக் கண்டதால் தான் அதைக் கொணர்ந்தேன்.

நண்பர் ஒருவர் ஸ், ஷ, ஶ, ஜ, போன்ற கடன்வாங்கிய எழுத்துகள் இருப்பது நல்லது தானே, இல்லாதது மொழிக்கு வறுமை எனவும் குறிப்பிட்டிருந்தார். அவர் எடுத்துக்காட்டாய் வைத்தது, இளங்கோவடிகள் கயவாகு (கஜபாகு) எனக் குறிப்பிட்டிருந்தது. அவர் கயவாகு என்பதை, கயவன் என்பது மாதிரி ஒலிப்பதைத் தொடர்புப் படுத்தியிருக்கவேண்டும்.

நாம் ஜ ஒலிப்பை ச என்றோ ய என்றோ ஒலிப்பதும் உண்டு. இராஜன் – இராசன் – இராயன். பாலி, பிராகிருதிகளில் கூட இவ்வழக்கம் இருந்ததாய் படித்த ஞாபகம். இப்பொழுது கூட, யோகா என்பதை, வட இந்தியர்கள், ஜோகா என உச்சரிப்பதும் எழுதுவதும் உண்டு. மதுரைப்பக்கம் ஒலிப்புகளில் ச-விற்கான ஒலிப்புமாற்றத்தை நிறையக் காணலாம். ஜல்லி, ஜல்லிக்கட்டு, ஜீனி (சீனி சர்க்கரை), ஶாப்பிடுறியா/ ச்சாப்பிடுறியா, இது போல.

உண்மையில், அது கஜபாகு என்றே இருந்திருக்கவேண்டும், கயவாகு என்பது அதன் திரிபு, மேலும், வட்டார-சமகிருத-மொழிகளில் அவ்வாறு அழைத்திருப்பதால் தான் நாம் அவ்வாறுக் கூறப் பழகியிருக்க வேண்டும் என்றேக் கூறுகிறேன். மேலே நடராஜன் அவர்கள் கூறியிருப்பது போலவும் அமையும், ஆனால் அதன் தோற்றுவாயைப் பற்றியக் கேள்வியே கணன் சுவாமியின் கேள்வி என நினைக்கிறேன். சீனா- சீனம் எனக் கூறும் நாம், அவர்கள் நாட்டைஎப்படி உச்சரிக்கிறார்களோ அப்படியே உச்சரிப்பதில்லை, அது நம்மிடம் உள்ள பலுக்கலின் விளைவாய் வந்தது. ஆனால் ஆங்கிலேயர்கள் உழப்புவது போல் நாம் பெரிதாக உழப்புவது இல்லை. ஐரோப்பியர்கள் கூட இருப்பதை இருப்பது போல் உச்சரிக்க விழைகிறார்கள். ஆயினும் ஒரு விசயத்தைப் பற்றித் தெரியாத போது, அவர்கள் மொழி விதிகளுக்குட்பட்டேப் பேசுகிறார்கள். எடுத்துக்காட்டாக, என் (அப்பா) பெயரை இராயேந்திரன் என முதன்முறை, ஒரு ஐரோப்பியர் உச்சரித்ததும் உண்மையில் அசந்துவிட்டேன், கொஞ்சம் விட்டிருந்தால், உங்களுக்கு தமிழ் தெரியுமா எனக் கேட்டிருபபேன், செர்மானியர்கள் ஜ-வை ய என உச்சரிப்பவர்கள்.

எழுத்துகள் இல்லாதது நமது வறுமை என்பது சற்று மிகையானது, ஒவ்வொரு மொழிகளிலும் சில வேறுபட்ட ஒலிப்புகள் உள்ளன, எல்லா ஒலிப்பையும் நாம் பெற வேண்டுமென்ற அவசியமில்லை. சொட்டான் இடுதல் போன்ற ஒலிபபுகள் ஆப்பிரிக்க மொழிகளில் உள்ளன, இப்படிப் பார்த்து பார்த்து நம் மொழிகளில் சேர்க்கவும் செய்யலாம், செய்யாமலும் விடலாம். ஆனால் அதுத் தேவையா..

ஒரு வேளை அக்காலத்தில் கயவாகு எனப் படித்த உடன், அது ஒருவரின் பெயர் என தமிழர்கள் உணர்ந்திருக்கலாம். ஆனால் அரைகுறையாய் தமிழ்நாட்டம் இல்லாதவர்கள் குழம்புவதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு.

நான் பள்ளிப் படிக்கும் போது, திருகளவியின் படம் வரைந்து, திருகளவி என்று எழுதியதை என் இயற்பியல் ஆசிரியர் ஒத்துக் கொள்ளவேயில்லை. அதை, திருகு அளவி என்றே நீ எழுதியிருக்க வேண்டும் என வாதிட்டார், காரணம் களவி –களவு செய்தலுக்கு–என்பதற்கு திரு அடைமொழி கொடுத்தது போல் உள்ளது என்றார். அப்படி எப்படிக் குழம்ப முடியும் என விளங்கவில்லை. புணர்ச்சியின் போது இருபொருள் பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்றாலும், இடம் பொருள் பொறுத்து அது மாறும் குணத்தை நம் மூளை மிக எளிதாக விளங்கிக் கொள்ளும் என்றேத் தோன்றுகிறது. தவிர, ஒரு சொல் பன்மொழியான, களவு என்பதை ஒரு பொருள் காணாமல்போகும் பொருட்டோ அதுபற்றியப் பேச்சின் பொருட்டோ திருட்டு எனவும் தலைவன்-தலைவி வாழ்க்கை முறைப் பற்றிப் பேசுங்கால், காதல் வாழ்க்கையெனவும் மிகவும் எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.

ஆழ்வார்கள் சிரிதரன், சீராமன் என்றுக் குறிப்பிட்டதைக் குறித்து பதுமசிரி எனக் குறிப்பிடலாம் என செல்வா அண்ணன் குறிப்பிட்டிருந்தார், இரவி அவர்கள் தாமரைத் திரு (அப்படிக் கூறக் கூடாது என சட்டம் இயற்றினார்களாம்… ) எனவும், பதுமத்திரு எனவும் குறிப்பிட்டிருந்தனர்.  ஶ்ரீரங்கம் சீரங்கம் என அழைக்கப்படுவதையும் சொல்லியிருந்தேன், ஆனால், அதை மறுத்து திருவரங்கம், திருவில்லிப்புத்தூர் எனவே இருக்கவேண்டும் என வேறொரு நண்பர் கூறியிருந்தார். மேலும், ஒரு படி மேலே போய் (கிருட்டிணன்) பக்ஷிராஜனைப் பறவைவேந்தனாக்கிவிட்டார்.

அவர் பறவைவேந்தன் என்றால், நான் அரவஞ்சூடியோன்!  என் சீனத் தோழி என் பெயரை எழுதுவதற்குள் படாதபாடுபட்டாள். ஆயினும் Eswar என்பதை நற்குணங்கள் கொண்ட எழுத்துகளாக வரைந்து காண்பித்ததும். பின்னர் ஈஸ்வர் எனபதைக் கடவுளாகவே எழுதுவது எப்படி என புரியாமலும் விழித்தாள், ஆனால் அது ஏன் என விளங்கவில்லை!

ஆயினும், பிரச்சனை எங்கிருந்து எனப் புரியவில்லையெனினும், தமிழை சரியாகப் பேசுவதா, அல்லது, தமிழ்ப்படுத்துவதா என்பதைப்பொறுத்து இரண்டும் சரிதான் என்பது என் பார்வை, ஆனால் இரண்டையும் வருந்தலைமுறையினருக்குத் தெரியச் செய்கிறோமா என்பது என் வருத்தம். தற்பொழுது தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நடத்துபவர்கள், ஆங்கிலவார்த்தைகளைப் பயன்படுத்தும் பொழுது, பெயர்ச்சொல், உரிச்சொல், வினைச்சொல், வினையுரிச்சொல் என எல்லாவற்றையும் கன்னாபின்னாவென்று மாற்றி மாற்றிப் பேசுகிறார்கள்.  இவர்களுக்கு தமிழும் வரமாட்டேன் என்கிறது, ஆங்கிலமும் வரமாட்டேன் என்கிறது.

துளியை துமியாக்கியதற்காக கலைவாணியே இறங்கி வந்து ஆமோதித்த கதையும் இங்கே உண்டு!  எந்நேரமும் ஒரு புதுவார்த்தை உருவாவதற்கு அணியமாய் இருத்தல் நல்ம் தான் எனினும், இலக்கணம், மொழிநடை என்பது, மனிதமூளையின் செயல்பாட்டினால் உருவாவது, ஆக, அதுவொரு இலக்கணத்தோடும் சமூக நடைமுறையாலும் மட்டும் மிக எளிதாக அமையக்கூடும்.  வடிவேலு அவர்களின் நகைச்சுவைத் துணுக்குகளும் சொற்றொடர்களும் மிக அதிகமாக சமூகத்தால் ஏற்கப்பட்டதற்கானக் காரணமும் இதனூடாகவே நடந்திருக்கலாம் எனக் கருதுகிறேன்.

Jallikkattu – A hope for bringing the Tamils together!

There are discussions on why jallikkattu is given much importance and why many do not raise their voice against on other issues.   In my view,  along with the Jalikkattu, all the Tamil’s issues are interconnected.  Essentially, it all shrinks to a point that central and state governments are not listening to the people.  From JJ calling the flood-stricken people as  “Anbarndha Vaakkala perumakkalae” to photoshop works of CM and PM offices on the lighter vein. On a strong note, implementing and proposing vedic and agamic rules, proposing  hidden agenda on single-language policy to signing the new nuclear deals and they have agenda for ‘make in India’, but close the locals’ business,  exclusively for Tamils, not supporting the Tamil Departments in many universities by funding and not maintaining the chairs and even the specialized Central Institute for Classical Tamil research.  Every thing has one move, which I could never grasp, but the moves seem definitely against the people.

Anyway, we have been fighting for the rights or for the needs locally.  All the time, people have been fighting on their local issues, taking away the panchami lands by the political and don-like figures have been there for more than 20 years. And rupturing the eco-systems, be it the local lakes or mining, every issue has been dealt by the locals and they keep on fighting. Only thing is Chennai has been isolated with its own news and celebrations, not the majority were interested in others’ problems.

I can give an example from the smallest part, in which we have been living for more than 50 years, it has a few streets. For you, the electricity problem was in limelight only for this decade, even though Chennai was not very much affected, it was reflected in the political ways. However, we have been living such conditions nearly 30 years (there was no electricity before, as it was a newly created area), and most importantly, our place is very close to Madurai airport (just 2kms away)! We also still fight for our rights, write petitions and etc. The officers who are lenient in filling the Chennai lakes with buildings, actually create a lot of troubles in our place, telling that we live in water catchment area, and the local kanmaai is approximately 150 meters away, even during the heavy rains, it does not enter into our area, so we are relatively in the safer and legally not violating area. Even such a small area with less than 100 families has many issues, so each has its own intensity!

Fishermen community from the Nagercoil, they have their own issues, many have cancer which is due to the reason that the beach sand has radioactive material! There the conditions are very natural, we can not avoid that, still we need to adapt to the situation. But the situation takes a big turn, when we oppose the Koodankulam project, many point that we have electricity problem, we need them at any cost. in a reactor, here we are going to use the same radio-active material in an intensive way!

We can not complain others for their discreetness on such issues, However, I see the jallikkattu issue reinforces all the problems to a single point, I think, it is because that many are still villagers in their heart and looking for their roots in various ways, as the globalized world swallows them in.  Though Jallikkattu, Silambam, Kalari and other martial arts were sporadic,  even at 2 or 3 generations back from our time, we still have the ‘genetic’ vibrations in the back of our heads!  If the jallikkattu will happen, against the court’s verdict, it may be a good indication that, we would join our hands together to speak of other atrocities, in the name of globalization and political agenda.  So, it might be a great start!

#‎SaveJallikkattu‬ ‪#‎JallikattuOrdinance‬ ‪#‎WeNeedJallikattu‬