மதுரை, மதுரம்! மதுரம்!!

 அண்மையில், அவசர காரியமாக சில வாரங்களுக்கு பாரதத்திற்கு போய் வர நேர்ந்தது!

காய்கின்ற வெயில்தனில், ஆங்காங்கே தண்ணீர்பந்தலும் மோர் பந்தலும் அமைத்து சித்திரை தாகம் தணிக்கும் மதுரையில் மனிதம், அறிவியல், பூமி என எல்லாவற்றையும் யோசிக்கும் சிலரை சந்திக்க நேர்ந்த அனுவங்கள்!

சில வாரங்களில், பல புதியவர்களையும் உயரிய மனிதர்களையும் சந்திக்க முடிந்தது. என் தம்பியார் Muthukumar Natarajan குமரன், மிக சாதாரணமாகக் கூட்டிக் கொண்டு போய் சேர்த்தது பாரி V Perianan Elayapari அண்ணனிடம்… டோமினோ விளைவுகள் போல் வரிசையாக, உயிர் தொழிநுட்ப விஞ்ஞானத்தோடு சமூக வேலைகளையும் பார்க்கும் சங்கர் Sankar Aakam அண்ணனையும், அவரைத் தொடர்ந்து, தந்தை வியாபாரத்தைப் பார்த்துக் கொண்டே அறிவியல் ஆய்வுகள் செய்யும் கோட்பாட்டு உயிரியலாளரான (Theoretical Biologist) Karthikeyan Ramanujam மெய்ஞான வழிகாட்டிகளையும் அவர் வழிசெல்வோர்களையும் இன்னும் பிற சமூகப் பற்றாளர்களையும் ஊருக்கு உழைப்பவர்களையும் காண நேர்ந்தது.

மிகக் குறைவான நாட்களேயிருந்தாலும் திடீர்திடீரென ஆட்களை நினைத்த நேரத்தில் சந்திக்க வைத்தவர் நம் இளையபாரி அண்ணன்.. இன்றைக்கு, அவரைப் பற்றி சில மாதங்களுக்கு முன் வந்த காணொலியைக் காண நேர்ந்தது, அதன் விளைவாய் இச்சிறு குறிப்பு.. மேலும் இக்காணொலி சமூகப் பொறுப்பாளர்களாக அவர்கள் செய்யும் விசயங்கள் பலருக்கு விருப்பமானதாகவும், ஆர்வத்தைத் தூண்டுவனவாகவும் வழிகாட்டியாகவும் அமையலாம்..

சங்கர் அண்ணனின் “பைந்தமிழ் மதுரை” நிகழ்ச்சிக்கு செல்லமுடியவில்லை, இருப்பினும் சில மணிநேர சந்திப்பில் நிறைய விசயங்களைப் பேச முடிந்தது. தன்னார்வராக, மதுரை பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு பாடங்களை எடுப்பதையும் துளிர் வட்டாரத்தின் மூலமும் மற்ற அமைப்புகளின் வழியாகவும் சிறுவர்களுக்கான அறிவியல் விசயங்களைச் செய்து வருவதையும் அறிய முடிந்தது.

இவர்களுடன் மதுரை பல்கலையில் போய் கிராமப்புற மாணாக்கர்களுக்கு அறிவியல் ஆய்வு செய்வதற்கு வழிவகுக்க வேண்டும் என முனைந்து மதுரையிலேயே இருக்கும் பேராசிரியர்  Muruga Poopathi Raja, முருக பூபதி இராஜா அவர்களையும் காண நேர்ந்தது! சமீபத்தில் அவர்களின் அல்சைமர் நோயினைச் சார்ந்த ஆய்வுகள் தேசிய நாளிதழ்களிலும் மற்றும் உலகளாவிய அறிவியல் பத்திரிகைகளிலும் பாடப்பட்டன! (dx.doi.org/10.1016/j.celrep.2016.01.076) அறிவியல் ஆய்வில் சிறந்த ஆய்வாளர்களைக் கொண்டிருந்தாலும் அதற்குரிய சூழ்நிலை பெரிதாக இல்லாத போதும், அதில் இருந்து ஒரு ஆய்வுக்குழுவை உருவாக்கி பரிமளித்து வருபவர்கள் இராஜா அண்ணன்! நேற்று அவரின் மற்றொரு, பொதுமக்களுக்காக எழுதப்பட்ட சிறப்புக் கட்டுரையினையும் பகிர்ந்திருந்தார்கள்! http://www.spincotech.com/ebook/may2016/

ஆயினும் சென்னையில் இருக்கும் என்னுடைய உற்றத் தோழர்களும் ஆழ்ந்தத் தேடுதல் வேட்கை கொண்வர்களுமான தேவா Devaraj Ns, இராகுல் Rahul Ravindran,   ஜீவா Jeeva Malini ஆகிய நண்பர்களைக் காண முடியாமல் வரநேர்ந்தது. மன்னிப்பார்களாகுக..