கற்றலும் சமூகமும் -2: ஆய்வும் கல்வியமைப்பும் சூழலும்

ஒரு துறையில் இருந்து மற்றொன்றுக்கு மாறுதல் என்பது எப்பொழுதும் சுற்றியிருப்பவர்களால் சரியாகப் பார்க்கப்படுவதில்லை.  இளங்கோ கல்லாணை ஒரு பதிவினை இட்டிருந்தார்.  அதில் சில வரிகளுக்கான மறுமொழியும் சில உதாரணங்களும்.

astroparticle physics, high energy physics என மிகவும் ஆழமானத் துறைகளில் ஆய்வு செய்தவர்களெல்லாம், ஒரு கட்டத்தில், உயிரியற்துறைகளில் புரோட்டீன், டிஎன்ஏ, கேன்சர் ஆய்வு எனவும், ஸ்டாக் மார்க்கெட், நிதித்துறைகளிலும், சமூகவியல் ஆய்வுகளுக்கும் மாறுவது இயற்கை. தற்பொழுது எல்லாத்துறைகளும் சங்கமித்து அக்காலத்தில் இருந்த மாதிரி நேச்சுரல் பிலாஸபி-ஆகும் காலம் இது. ஐஐடி மாதிரியான நிறுவனங்களில் இது போல் துறை மாறுதல் இயற்கை, உதாரணத்துக்கு, எனக்கு குவாண்டம் ஃபீல்ட் தியரி சொல்லிக் கொடுத்த பேராசிரியர், ஐஐடியில் BTech Electrical engg. படித்துவிட்டு, PhD ஸ்ட்ரிங் இயற்பியல்/ஹை எனர்ஜி பிஸிக்ஸ்ல் ஆய்வுக்கு மாறியவர், நான் வேலை பார்த்த இன்னொரு பேராசிரியர் ஐஐடி மெக்கானிகல் படித்தவர், phd இயற்பியலிலும் கருந்துளை, குவாண்டம் காஸ்மாலஜியில் ஆய்வு செய்பவர். இது போல் நிறைய நண்பர்களும் பொறியியல் படித்துவிட்டு இயற்பியல், கணித ஆய்வுகளுக்கு வந்தவர்கள் உள்ளனர். மேலும் நம் ஊரில், பொறியியல் இளநிலை இருந்தால் அறிவியலில் முனைவர் ஆய்வுக்கு நேராக செல்லலாம். இதை எதற்கு சொல்ல வருகிறேன் என்றால், எந்நேரமும் புதியதொருத் துறையைத் தேர்ந்தெடுப்பதற்கு நம்பிக்கையும் வாய்ப்புகளையும் அவர்கள் மனதில் சிந்திப்பதற்கு வாய்ப்புகளுண்டு.

ஒருவர் ஐஐடியில் படித்தவர்கள், பைனான்ஸ் துறைகளுக்குப் போவதைத் தடுப்பது போல், நேர்முகத்துக்கு நிதித்துறை நிறுவனங்களை அழைக்கக்கூடாது என இன்னொருவர் பரிந்துரைத்தது சரிதான் எனக் கூறியிருந்தார்.  எப்பொழுதும் ஐஐடியில் இருந்து ஐடி போனவர்கள், (எனக்குத் தெரிந்தே நிறையப் பேர்)  திரும்பவும், அவர்களின் துறைக்கு வருவதற்கும் உதாரணங்கள் நிறைய உண்டு.  ஒரு துறையில் இருந்து இன்னொரு துறைக்கோ, அல்லது வேலையைத் தேர்ந்தெடுப்பதற்கோ உரிமைகள் உண்டு. அதைத் திணிப்பது என்பது முட்டாள்தனமானது. குவாண்டம் இயற்பியலில் ஆய்வு செய்பவன் நான், எனக்கு தத்துவம், மூளைநரம்பியல், மொழியியல், பொருளாதாரம் எனப் பலதரப்பட்ட ஆய்வுகளில் ஈடுபாடு உண்டு. என்னுடைய நேரம் மட்டும் தான் எனக்குக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டுமேத் தவிர, யாரோ ஒருவர் அல்ல.  ஆய்வுகளில் ஈடுபடுபவர்களுக்கு ஏற்கனவே சமூகஞ்சார்ந்த பொறுப்புகள் நிறைய உண்டு, வாங்கிய ஒவ்வொரு காசுக்கும் பொறுப்பெடுப்பது – பொதுமக்களுக்கு தங்கள் ஆய்வினைப் பற்றி தெரியப்படுத்துதல், கற்றுக் கொடுப்பது என்பன சில மேலோட்டமானவை.

இது சம்பந்தமான உரையாடலில், ஐஐடியைப் பற்றிப் பேசும்பொழுது, இஸ்ரோ போன்ற நிறுவனங்கள் இன்னும் வெளிநாடுகளில் இருந்துப் பொருட்களை வாங்குகிறார்கள் என ஒருவர் கூறியிருந்தார்.
இஸ்ரோ டிஆர்டிஓ போன்ற நிறுவனங்களில் அரசியல் நிறைய இருப்பது பிரச்சினை தான். ஆனால், நமக்கு எப்பொழுது ஒரு பொருளின் அவசியம் அதிகமாகிறதோ அப்பொழுது அதற்கான தயாரிப்புகளை யோசிக்கலாம், அல்லது அப்பொருளை வாங்குவதே சிறந்தது, ஏற்கனவே நிறையக் காசு செலவாகிறது என்பதும் எல்லோருடைய ஆதங்கமாயுள்ளது.

ஆனால்,  பொறியியல் படித்துவிட்டு நிதித்துறையில் ஏன் வாழ்வை வீண்செய்ய வேண்டும் என்பது மாதிரி இளங்கோ அண்ணன் கூறியிருந்தார், எவ்வளவு அவர்கள் படித்தப் படிப்பு பயன்படுத்தப்படுகிறது என்பது கேள்விக்குறி தான். நான் குவாண்டம் பைனான்ஸ்-ல் பழம் தின்று கொட்டை போட்டாலோ அல்லது புதிய முறைகளைக் கண்டுபிடித்தாலோ, நம் ஊர் ஸ்டாக் எக்சேஞ்சிலோ, ரிசர்வ் வங்கியிலோ அவரை வேலைக்கு வைக்கவோ, பாலிஸிக்களை உருவாக்கவோ விடுவார்களா எனத் தெரியவில்லை. உதாரணம், சிவா அய்யாதுரை (விமர்சனங்கள் இருந்தாலும்), இரகுராம்.